sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்


ADDED : பிப் 12, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 12:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்:பா.ஜ., நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 38. பா.ஜ., எஸ்.எஸ்.குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர். நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு வெள்ளானைபட்டியில் நீலம்பூர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. இரவு 10:00 மணிக்கு மேல் மது விற்பது குறித்து கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறைக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து சுரேஷ் குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார், டாஸ்மாக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பா.ஜ., எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் ஜானகிராமன் கூறுகையில், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் தாமதப்படுத்துகின்றனர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us