sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்: எல்லை துாரத்தை அதிகரிக்க கோாிக்கை

/

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்: எல்லை துாரத்தை அதிகரிக்க கோாிக்கை

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்: எல்லை துாரத்தை அதிகரிக்க கோாிக்கை

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்: எல்லை துாரத்தை அதிகரிக்க கோாிக்கை


ADDED : மார் 07, 2024 11:49 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், எல்லை துாரத்தை அதிகரிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி பகுதியில், 1,800 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அந்தந்த ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து இதுவரை, 15 கி.மீ., துாரத்திற்கு மட்டுமே, ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், ஆட்டோ டிரைவர்களுக்கு போதிய சவாரி கிடைக்காமல் உள்ளதாக, டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 'மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

அதில், 'ஆட்டோ இயக்கத்தை, 15 கி.மீ., தொலைவை, 30 கி.மீ., அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்; தேவையான ஆட்டோ நிறுத்தம் ஏற்படுத்தவேண்டும்; பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்; இல்லாதப்பட்சத்தில், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' என, வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us