sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை

/

கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை

கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை

கலப்பட டீ துாளை தவிர்த்தால் நோயில்லை


ADDED : மார் 21, 2025 09:57 PM

Google News

ADDED : மார் 21, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; 'நோய்கள் ஏற்படுவதை தடுக்க, கலப்பட டீ துாளை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லுாரியில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார்.

தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி அஞ்சலி பேசுகையில், ''கலப்பட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், பல நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கலப்படமில்லாத, துாளை பயன்படுத்தி தயாரிக்கும் தேநீரை குடிப்பதன் மூலம், உடலில் நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கலப்பட தேயிலை துாளை பயன்படுத்தினால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கலப்பட தேயிலை துாள் கண்டறிந்து தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, கலப்பட தேயிளை துாளை கண்டறிவது குறித்து, மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவசுப்பிரமணியன் பேசுகையில், ''கடைகளில் 'பேக்கிங்' செய்யப்பட்ட, உணவு பொருட்களின் சுவையை கூட்ட ரசாயனங்களை பயன் படுத்துகின்றனர். இவைகள் உடலில் நோய்கள் ஏற்பட காரணமாக இருப்பதால், அவைகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர் வீராசாமி, மின் துறை உதவி பொறியாளர் சந்தோஷ், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us