sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

/

அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு


ADDED : பிப் 12, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 12, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 41வது ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தமிழ் ஆசிரியை இசக்கி ராணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. கலை திருவிழாவில் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்த மாணவன் யோகேஷ், 'கீ போர்டு' வாசித்தது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியளவில், முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்க நாணயம் மற்றும் ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், கூக்கல்தொரை கனரா வங்கி கிளை சார்பில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கு, 22 ஆயிரத்து, 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளி பி.டி.ஏ., தலைவர்கள் டட்லி மற்றும் காமராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கவிதா மற்றும் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ரவிக்குமார், முனீஸ்வரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி வரலாறு ஆசிரியை மஞ்சு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us