ADDED : ஜன 08, 2024 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஐயப்பன் கோவிலில் மகா உற்சவ விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் வெங்கடேசலு நகரில் வஞ்சியம்மன் கோவில் அருகில் ஐயப்பன் கோவில் உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், 44ம் ஆண்டு மகோற்சவ விழா நடந்தது.
முதல் நாள், காலை, 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6.30 மணிக்கு நெய் அபிஷேகம், 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், காலை, 11.00 மணிக்கு மகா அன்னதானம், மாலை, 4.30 மணிக்கு ஐயப்பன் திருவீதி உலா நடந்தது.
மாலை, 6.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு, 9.00 மணிக்கு வாண வேடிக்கை, தொடர்ந்து, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.