/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை சரிவில் தவறி விழுந்த குட்டி யானை பலி
/
மலை சரிவில் தவறி விழுந்த குட்டி யானை பலி
ADDED : செப் 12, 2025 08:10 PM
கூடலுார்,; முதுமலை, மகினகுடி சிங்கார வனப்பகுதியில், மலைச்சரிவிலிருந்து தவறி விழுந்த ஆண் குட்டியான உயிரிழந்தது.
முதுமலை, மசினகுடி கோட்டம் சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட நார்தன்ஹே வனப்பகுதியில் நேற்று முன்தினம், மாலை, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மசினகுடி துணை இயக்குனர் வித்யாதர், வன சிங்கார வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் அதன் உடலை நேற்று ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் குட்டி யானைக்கு ஒன்றரை வயது இருக்கும்.
குட்டி யானை மலை சரிவிலிருந்து தவறி விழுந்து, அடிபட்டு உயிரிழந்துள்ளது,' என்றனர்.