sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி

/

தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி

தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி

தாயுடன் சேர்ந்தது குட்டி யானை: வனத்துறை நிம்மதி


UPDATED : ஆக 13, 2024 11:37 AM

ADDED : ஆக 13, 2024 11:34 AM

Google News

UPDATED : ஆக 13, 2024 11:37 AM ADDED : ஆக 13, 2024 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதகை: கூடலூர் அருகே தாயை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை, யானைகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

மசினகுடி, மாயாறு சாலையோரம் குட்டி யானை ஒன்று அதன் தாயை பிரிந்து தவித்தபடி சுற்றித் திரிந்துள்ளது. குட்டி யானையின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்றனர்.

குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், தாயுடன் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ட்ரோன் காமிரா உதவியுடன் தாய் யானை எங்கு உள்ளது என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், சீகூர் வனப்பகுதியில் அசூரா மட்டம் என்ற இடத்தில் தாய் யானை, தமது கூட்டத்துடன் சுற்றித் திரிவதை கண்டுபிடித்தனர். பின்னர் நேற்றிரவு குட்டி யானையுடன் அங்கு சென்று 3 யானை கூட்டங்கள் இருந்த இடத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்றுவிட்டனர்.

குட்டியானையை அதன் தாயுடன் சேர்த்துவிட்டாலும், அதன் நடமாட்டத்தை 3 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us