/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்
/
பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்
பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்
பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்
ADDED : ஆக 11, 2025 08:24 PM

குன்னுார் ; குன்னுார் நான்சச் பள்ளிகள் அருகே நேற்று காலை உலா வந்த கரடியால், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி வரும் கரடிகள் குடியிருப்புகள், பள்ளிகள், சத்துணவு கூட கதவுகளை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சேதம் செய்து வருகின்றன.
இந்நிலையில், நான்சச் சி.எஸ்.ஐ.,ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் நேற்று காலை,7:30 மணியளவில் கரடி ஒன்று உலா வந்தது. இதனை கண்ட அப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இரவில் மட்டுமின்றி பகலிலும் உலா வரும் இந்த கரடியால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால், தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
பெற்றார் கூறு கையில், 'அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து செல்லும் கரடியால், பள்ளி குழந்தைகளுக்கு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.