sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்

/

பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்

பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்

பள்ளிக்கு காலையில் வந்த கரடி; பிள்ளைகளை அனுப்ப அச்சம்


ADDED : ஆக 11, 2025 08:24 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் ; குன்னுார் நான்சச் பள்ளிகள் அருகே நேற்று காலை உலா வந்த கரடியால், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி வரும் கரடிகள் குடியிருப்புகள், பள்ளிகள், சத்துணவு கூட கதவுகளை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சேதம் செய்து வருகின்றன.

இந்நிலையில், நான்சச் சி.எஸ்.ஐ.,ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் நேற்று காலை,7:30 மணியளவில் கரடி ஒன்று உலா வந்தது. இதனை கண்ட அப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இரவில் மட்டுமின்றி பகலிலும் உலா வரும் இந்த கரடியால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால், தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

பெற்றார் கூறு கையில், 'அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து செல்லும் கரடியால், பள்ளி குழந்தைகளுக்கு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us