/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அயனி பலா நாற்று வனத்தில் நடவு செய்தால் பயன்
/
அயனி பலா நாற்று வனத்தில் நடவு செய்தால் பயன்
ADDED : ஜூன் 03, 2025 11:10 PM

கூடலுார்,; 'கூடலுாரில் அழிவின் பிடியில் உள்ள 'அயனி' பலா விதைகளை வனத்துறையினர் சேகரித்து நாற்று உற்பத்தி செய்து வனத்தில் நடவு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
கூடலுார் பகுதி பசுமை மாறாமல் இயற்கை வளங்களை கொண்டுள்ளதால், வன விலங்குகள், பறவைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இவைகளின் உணவு தேவையை வனங்களில் விளையக்கூடிய நாட்டு கொய்யா, நாவல் பழம், பலாப்பழம், அயனி பலா உள்ளிட்ட பழங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
வன அழிப்பு, வனத்தீ காரணமாக இந்த மரங்கள் புதிதாக உற்பத்தியாவது பாதிக்கப்பட்டுள்ளது. அதில், அயனி பலாமரங்கள் 'பர்னிச்சர்' தேவைக் காக வன கொள்ளையர்களால் வெட்டி கடத்தப்பட்டதால், தற்போது சாலையோரங்களில், சில தனியார் இடங்களில் மட்டுமே இந்த மரங்கள் உள்ளது. இந்நிலையில், சாலையோரம் உள்ள பழமையான அயனி மரங்களை, ஆபத்தான மரம் என்ன கூறி, அனுமதி பெற்றுவெட்ட, சில வனக்கொள்ளையர் மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதுஅயனி பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. குரங்குகள், பறவைகள் அவைகளை உட்கொண்டு உணவுதேவையை பூர்த்தி செய்து வருகின்றன. பழங்களில் இருந்து விழும் விதைகளை வனத்துறையினர் சேகரித்து அதிலிருந்து நாற்றுகள் உற்பத்தி செய்து, வனங்களில் நடவு செய்ய வலியுறுத்தியுள்ளனர். தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'கூடலுார் வன பகுதியில் இயற்கையாகவளர்ந்து அயனி பலா மரங்கள் பல்வேறு காரணங்களால் பெருமளவில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இவைகளை காணமுடிகிறது.
மரங்களை சார்ந்து வரும் குரங்கு, அணில், பறவைகள் போன்ற வன உயிரினங்களில் உணவு தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய இந்த மரங்களை வனப்பகுதிகள் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, கிடைக்கும் அயனி பலா விதைகளை வனத்துறையினர் சேகரித்து, நாற்றுகளை உற்பத்தி செய்து வனப்பகுதியில் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எதிர்காலத்தில் விலங்குகளுக்கு பயன் ஏற்படும்,' என்றனர்.