sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

/

பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பில்லுார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : ஜூன் 16, 2025 10:30 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முழு கொள்ளளவையும் எட்டி அணை நிரம்பி வழிகிறது. இதனால் பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது.

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் கட்டியுள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். நேற்று முன்தினம் மாலை பில்லூர் அணையின் நீர்மட்டம், 82.25 அடியாக இருந்தது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம், நள்ளிரவு, 2:30 மணிக்கு முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இரண்டாவது முறை நிரம்பியது


கடந்த மாதம் 26ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணை நிரம்பி வழிந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அணை நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. இம்மாதம் 16ம் தேதி கனமழையால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. கடந்த, 23 நாட்களில் இரண்டாவது முறையாக அணை நிரம்பி வழிகிறது.






      Dinamalar
      Follow us