sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்

கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்

கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்


ADDED : பிப் 17, 2024 12:48 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் சளிவயல் விநாயகர், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நடந்த பறவை காவடி பால்குடம் ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கூடலுார் நந்தட்டி சளிவயல் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுருகன் கோவில் 29ம் ஆண்டு திருவிழா, 14ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றுதல், காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது.

இரவு, தானிமட்டம் ஆற்றங்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் பாலித்து கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன.

நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை, 11:30 மணிக்கு தானிமட்டம் மாரியம்மன் கோவிலில் இருந்து, பறவை காவடி ஊர்வலம் துவங்கியது.

அதில், பக்தர்கள் பறவை காவடி, வேல் குத்தியும், பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்தனர். ஊர்வலம் சளிவயல் வழியாக கோவிலை வந்தடைந்தது.

இன்று, இரவு தேர்த் திருவிழா; நாளை மஞ்சள் நீராட்டு ஊர்வலத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, கிராம மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us