/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்
/
கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்
கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்
கோவில் திருவிழாவில் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்
ADDED : பிப் 17, 2024 12:48 AM

கூடலுார்:கூடலுார் சளிவயல் விநாயகர், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நடந்த பறவை காவடி பால்குடம் ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலுார் நந்தட்டி சளிவயல் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுருகன் கோவில் 29ம் ஆண்டு திருவிழா, 14ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றுதல், காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு, தானிமட்டம் ஆற்றங்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் பாலித்து கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன.
நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை, 11:30 மணிக்கு தானிமட்டம் மாரியம்மன் கோவிலில் இருந்து, பறவை காவடி ஊர்வலம் துவங்கியது.
அதில், பக்தர்கள் பறவை காவடி, வேல் குத்தியும், பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்தனர். ஊர்வலம் சளிவயல் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இன்று, இரவு தேர்த் திருவிழா; நாளை மஞ்சள் நீராட்டு ஊர்வலத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, கிராம மக்கள் செய்துள்ளனர்.