sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து

/

மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து

மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து

மழையால் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து


ADDED : ஜன 07, 2024 02:51 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால், குன்னுார் சிம்ஸ் பூங்கா மற்றும் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணியரின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கடந்த ஆண்டு ஜன., துவக்க வாரத்தில் நாள்தோறும், 1,000த்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில், தற்போது, 400 பேருக்கும் குறைவானவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்த சாரல் மழையால், பூங்கா படகு இல்ல ஏரியில் படகு சவாரி நிறுத்தப்ட்டது.

சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'குன்னுாரில் மழை பெய்யும் போது மட்டும் படகு சவாரி நிறுத்தப்படும். காலநிலை மாறினால் மீண்டும் இயக்கப்படும். நடப்பாண்டு பனி விழும் மாதத்தில், மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவுவதால் சுற்றுலாப் பயணியரின் வருகை வெகுவாக குறைந்துள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us