/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை
/
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாய்களுடன் போலீசார் விசாரணை
ADDED : மார் 20, 2024 01:22 AM
ஊட்டி;ஊட்டியில், 2 பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியில் உள்ள இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மெயிலை பார்த்தனர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி தலைமையிலான வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், 2 பள்ளிகளுக்கும் சென்று சோதனை செய்தனர். மேலும், விக்கி, மதி ஆகிய 2 மோப்ப நாயுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி கூறுகையில்,''ஊட்டியில் இரண்டு பிரபல பள்ளிகளுக்கு இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சோதனை முடிவில் இந்த புகார்கள் புரளி என, தெரியவந்துள்ளது.
அந்த இ--மெயிலில் எந்த காரணத்திற்கு என்று குறிப்பிடாமல், வெறுமனே 'வெடி குண்டு வெடிக்கும்' என்று மட்டும் மிரட்டல் உள்ளது, இ--மெயில் முகவரியில் உள்ள, ஐ.பி.,முகவரியை வைத்து, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

