/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 05, 2025 10:17 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு எல்லைக்கம்பை ஸ்ரீ எல்லைமாரியம்மன் கோவில், 53வது ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவிலில், கடந்த, 29ம் தேதி காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமம் நிகழ்ச்சியை அடுத்து, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அலங்கார அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன.
நேற்று முன்தினம் (4ம் தேதி) இரவு, 11:00 மணிக்கு, அம்மன் அழைப்பு நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, காலை, 7:00 மணி முதல் அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பறவை காவடி ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, கரகாட்டம், பேண்டு வாத்தியம் மற்றும் துடும்பாட்டம் இடம்பெற்றது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருத்தேர் வீதி உலா நடந்தது. விழாவில், கட்ட பெட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை, (6ம் தேதி) 9:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம், பகல், 1:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜையும், மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை அடுத்து, மாலை, 6:00 மணிக்கு அம்மன் கங்கையில் கரை சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12ம் தேதி மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர், எல்லக்கம்பை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.