sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

/

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 10, 2026 04:51 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி துாய்மை பணியாளர் களுக்கு, காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஒரு மாதமாக, வெள்ளோட்டமாக உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முறைப்படி திட்டம் துவக்க விழா நடந்தது. சென்னையில் இருந்து, காணொளி காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, கோத்தகிரி நகராட்சியில், நேற்று திட்டம் துவக்க விழா நடந்தது. நகராட்சித் தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.

இந்து அறநிலையத்துறை மாவட்ட தலைவர் போஜன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில் ரங்கராஜ், தி.மு.க., ஒன்றிய செய லாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி துாய்மை பணியாளர்கள், 98 பேருக்கு, காலை உணவு வழங்கப்பட்டது. ஊட்டி நகராட்சி நகர் நல அலுவலர் சிபி மற்றும் கோத்தகிரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து உட்பட கவுன்சிலர்கள், துாய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us