sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு

/

பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு

பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு

பந்தலுாரில் இழுவை திறன் இல்லாத பஸ்கள்; விடுமுறை நாளில் பெயரளவிற்கு ஆய்வு


ADDED : ஜன 30, 2025 09:34 PM

Google News

ADDED : ஜன 30, 2025 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள், இழுவை திறன் இல்லாமல் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அரசு போக்குவரத்துகழக கூடலுார் கிளையில் இருந்து, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலான பஸ்கள் சமவெளி மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயக்கி, பழுதடைந்த பழைய பஸ்கள் இப்பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

குறைவான பஸ்களை இயக்கப்படும் நிலையில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில், ஒவ்வொரு பஸ்சிலும், 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த பஸ்களில் குந்தலாடி மற்றும் கொளப்பள்ளி வழித்தடங்களில் இயக்கப்படும் சில பஸ்கள், போதிய இழுவை திறன் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டுப்பாங்கான பகுதிகளில் பயணிகள் இறங்கி நடந்து பின்னர் பஸ்களில் பயணிக்கும் சூழல் தொடர்கிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் குறைவான பயணிகள் பயணிக்கும் நேரத்தில், போக்குவரத்து கழக பொறியாளர் இந்த பஸ்களில் பயணித்து, பெயர் அளவிற்கு ஆய்வு செய்கிறார்.

ஆய்வின் முடிவில் பஸ்கள் நல்ல இழுவை திறன் உள்ளதாக சான்றிதழ் அளிப்பதால், பயணிகளின் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே, கூடுதல் பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் நல்ல நிலையில் உள்ள பஸ்களை, இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us