sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

/

எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு


ADDED : பிப் 11, 2025 11:21 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட பலர் மீது மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முதுமலை, மசினகுடி செம்மநத்தம் பழங்குடியினர் கிராமத்தில், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்ட பணிக்காக, ஜன., 30ல், சோலார் பேனல் ஏற்றி சென்ற வாகனத்தை, மசினகுடி வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தொடர்ந்து, மசினகுடி துணை இயக்குனர் அலுவலகத்தில், 5ம் தேதி மாலை நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படாததால், எம்.எல்.ஏ., தலைமையில், துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை அதிகாரிகள், போலீசார் நடத்தி பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வனத்துறை அளித்த புகாரை தொடர்ந்து, எம்.எல்.ஏ., உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us