sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுாரில் திறந்த வெளியில் குவிந்து வரும் குப்பை நாள்தோறும் முகாமிடும் கால்நடைகள்

/

கூடலுாரில் திறந்த வெளியில் குவிந்து வரும் குப்பை நாள்தோறும் முகாமிடும் கால்நடைகள்

கூடலுாரில் திறந்த வெளியில் குவிந்து வரும் குப்பை நாள்தோறும் முகாமிடும் கால்நடைகள்

கூடலுாரில் திறந்த வெளியில் குவிந்து வரும் குப்பை நாள்தோறும் முகாமிடும் கால்நடைகள்


ADDED : ஜன 03, 2025 09:48 PM

Google News

ADDED : ஜன 03, 2025 09:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,; 'கூடலுார் துப்புகுட்டி பேட்டை பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதையும், போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதையும் தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் நகரில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில், கடைக்காரர்கள் உதவியுடன், சிறு பூங்கா அமைத்து நகரை அழகு படுத்தி வருகிறது. மற்ற பகுதிகளில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க, அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். எனினும், சில பகுதிகளில் தொடர்ந்து திறந்த வெளியில் குப்பை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கூடலுார் கோழிக்கோடு சாலை, துப்புகுட்டிபேட்டை நிழல் குடை அருகே, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ள நிலையிலும், தொடர்ந்து சிலர் திறந்தவெளியில் குப்பை கொட்டி வருகின்றனர். அதில், உணவு தேடி ஆடுகள் முகாமிடுகின்றன.

இதனால், சுகாதாரம் பாதிப்பதுடன், கால்நடைகளால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது. நிகற்குடையிலும் நிற்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுார் புற நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டுப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. சாலையில் உலாவரும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனையும் தடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us