sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் மாற்றம் வர வேண்டும்: தமிழிசை பேட்டி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்

/

தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் மாற்றம் வர வேண்டும்: தமிழிசை பேட்டி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்

தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் மாற்றம் வர வேண்டும்: தமிழிசை பேட்டி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்

தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் மாற்றம் வர வேண்டும்: தமிழிசை பேட்டி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்


ADDED : செப் 21, 2024 05:53 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், பா.ஜ., சார்பில், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை இலக்கு ஒரு லட்சம் ஆகும். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்ல கூடிய, இக்கட்சியில் மக்கள் உறுப்பினராக சேர வேண்டும்.

சிறுவாணி தண்ணீர், கோவை சுற்றுவட்டார பகுதிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இதனை தடுத்து அட்டபாடியில் தடுப்பணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்கிறது. அதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் கூடிய மாற்றம் வர வேண்டும்.

திருமாவளவன், 'தன்னை முதலமைச்சராக மக்கள் சிந்திக்க வேண்டும்,' என, கூறுகிறார். அப்படி எனில், அவர் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறாரா;இல்லையா என்பது தெரியாது. திருப்பதி கோவில் லட்டு பிரச்னை வருத்தம் அளிக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். உதயநிதி துணை முதல்வராவது நாட்டுக்கு நல்லதல்ல. நடிகர் விஜய், அக்., 27ம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளார். அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

அவரும் தி.மு.க., போன்று, அதே பாதையில் செல்வதை போல உள்ளது. மாநாட்டில் அவர் எடுக்கும் முடிவுகளை பார்த்து தான் கருத்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் குமார், பரமேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கரப்ஷன்' அதிகரிப்பு

அன்னுாரில் நிருபர்களிடம் கூறியதாவது : தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கமிஷன், கலெக்சன், கரப்ஷன் தான் அதிகரித்து உள்ளது. தி.மு.க., கூட்டணி பலம் இழந்து வருகிறது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை இங்கு வரவழைக்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். ஆனால் இங்கு சாம்சங் நிறுவனத்தில் 10 நாட்களாக நடக்கும் வேலை நிறுத்தத்தை கண்டு கொள்ளவில்லை.கடந்த 100 நாட்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு 7000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நிதின் கட்கரி 10,000 கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். ஹெச்.பி., நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்துக்கு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால் அதிக வளர்ச்சி இருக்கும். எனவே, 2026ல் பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கானது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். நேரம் மிச்சமாகும். இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us