sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்

/

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்

42


UPDATED : ஏப் 11, 2024 02:57 PM

ADDED : ஏப் 11, 2024 02:49 PM

Google News

UPDATED : ஏப் 11, 2024 02:57 PM ADDED : ஏப் 11, 2024 02:49 PM

42


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : தி.மு.க., வேட்பாளர் ராஜாவிற்கு ஓட்டு சேகரிக்க, சென்றபோது நீலகிரி தொகுதியில் கிராமத்திற்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, அமைச்சர் மற்றும் கட்சியினரை மக்கள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி அருகே துாரட்டி கிராமத்திற்கு தி.மு.க.,வினர் பிரசார வாகனத்துடன் சென்று பிரசாரத்தை துவக்கினர். அப்போது, பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்; பாரத் மாதா கி ஜே' என, மக்கள் கோஷம் எழுப்பினர்.

எனினும், பிரசார வாகனத்திலிருந்து ஒலிபெருக்கி மூலம், கட்சி பாடலை ஒலிபரப்பி சில தொண்டர்கள் நடனம் ஆடினர். இதனால் மேலும் கொந்தளித்த கிராம மக்களும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என, தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தி.மு.க.,வினர் கிளம்பி சென்றனர்.

இந்து கடவுள்களை கேவலப்படுத்துவதா ?




கிராமத்தை சேர்ந்த வினோத் கூறுகையில்,''நமது இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தியும், மகளிரை கேவலப்படுத்தியும் பேசும், நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ராஜாவிற்கு ஓட்டு கேட்டு யாரும் கிராமத்திற்கு வரக்கூடாது,' என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட தி.மு.க., வினர் வந்து பேச்சை துவக்கியவுடன் நரேந்திர மோடி குறித்தும் தவறாக பேசினர். இந்து கடவுள்களை கேவலப்படுத்தும் தி.மு.க., வினரை விரட்டும் வகையில் மக்கள் அனைவரும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என, கோஷம் எழுப்பினர். கடவுள்களையும், இந்து மக்களையும் கேவலப்படுத்துபவருக்கு ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us