/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமுதாயக்கூடம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
/
சமுதாயக்கூடம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 13, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் சமுதாய கூடம் புதுப்பிக்கும் பணி துவங்கியது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில், 1வது வார்டில், 14.60 லட்ச ரூபாய் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்க்கும் பணி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மேயர் கல்பனா பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.
இதில், பகுதி கழக செயலாளர் அருள்குமார், கவுன்சிலர் சித்ரா தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

