sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு

/

100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு

100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு

100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு


ADDED : ஜூன் 06, 2025 10:22 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ;குன்னுாரில், 100 அடி உயர கம்பத்தில் சிக்கிய தேசியக்கொடியை விரைவாக ஏறி, சீரமைத்த தொழிலாளரை அனைவரும் பாராட்டினர்.

குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்கம் அருகே, 100 அடி உயர கம்பத்தில், தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கவிடப்பட்டுள்ளது. இக்கொடி கம்பத்தின் உச்சியில் இருந்த அசோக சக்கரா சின்னத்தில் சிக்கியது. ராணுவ அதிகாரிகள் கிரேன் வரவழைத்து, அதில் ஏறி சரி செய்ய முயற்சி செய்தனர். 70 அடி உயரத்திற்கு மேல் கிரேன் கொண்டு செல்ல முடியவில்லை. அப்போது அங்கு வந்த கம்பிச்சோலை கிராமத்தை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளர் ராஜா,45, அதனை சரி செய்வதாக கூறி, சில நிமிடங்களில் கம்பத்தில் ஏறி கொடியை சரி செய்து கீழிறங்கினார். அவரை, ராணுவ அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.






      Dinamalar
      Follow us