sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

/

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு


ADDED : ஜூலை 21, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள், 12 பேருக்கு எதிராக, நகராட்சி தலைவர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை, மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி தாக்கல் செய்த மனு:

உள்ளூர் பிரச்னைகளை கண்டறிந்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, ஒவ்வொரு கவுன்சிலரின் கடமை. ஆனால், அந்த கடமையை, நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர்.

அதாவது, கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஒரு பெண் கவுன்சிலர் அனுமதி பெறாமல், வெளிநாடு சென்றுள்ளார்.

கடமையை புறக் கணித்த, 12 கவுன்சிலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த மாதம் கலெக்டருக்கு அளித்த புகாரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.மாலா, ''மனுதாரர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை, நீலகிரி மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும்.

மனுதாரரின் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், 12 கவுன்சிலர்களும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பிறகே, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.






      Dinamalar
      Follow us