sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாற்றிட திட்டத்தில் ஏமாற்றப்பட்டதாக புகார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் விசாரணை

/

மாற்றிட திட்டத்தில் ஏமாற்றப்பட்டதாக புகார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் விசாரணை

மாற்றிட திட்டத்தில் ஏமாற்றப்பட்டதாக புகார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் விசாரணை

மாற்றிட திட்டத்தில் ஏமாற்றப்பட்டதாக புகார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் விசாரணை


ADDED : ஜூன் 25, 2025 10:01 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை மாற்றிட திட்டத்தில், பழங்குடியினர் ஏமாற்றப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறிய, 110 பழங்குடியினருக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது. அதில், நிலம் வாங்கி கொடுப்பதில், வன அதிகாரியாக உள்ளபலர் முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு, ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் மகேந்திரன் என்பவர், தமிழ்நாடு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஸ், ரேகாபிரியதர்ஷினி ஆகியோர் பழங்குடி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், முதுகுழியில் நடந்தது.

அதில், பழங்குடியின மக்கள் பலர் பேசுகையில்,'முதுமலை மாற்றிட திட்டத்தில் அரசு வழங்கிய நிதியை, சிலர் எங்களின் அறியாமையை பயன்படுத்தி, ஏமாற்றி மோசடி செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றிட திட்டத்தில் வெளியேறி வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினருக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். திட்ட கமிட்டியில் பழங்குடியினருக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும்,' என்றனர்.

ஆணைய உறுப்பினர்கள் பேசுகையில்,'மாற்றிட திட்டத்தில் பழங்குடியினர் ஏமாற்றப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதன் நடவடிக்கைகளை கவனித்து உரிய முடிவு எடுக்கப்படும். பழங்குடி மக்கள் வசிப்பிடங்களில் அடிப்படை வசதிகள், அரசு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். தொடர்ந்து. பழங்குடியின மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில், முதுமலை துணை இயக்குனர் வித்யா, கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துணை கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us