/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் பஸ்களை இயக்குவதில் குழப்பம்: பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அச்சம்
/
எல்லையில் பஸ்களை இயக்குவதில் குழப்பம்: பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அச்சம்
எல்லையில் பஸ்களை இயக்குவதில் குழப்பம்: பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அச்சம்
எல்லையில் பஸ்களை இயக்குவதில் குழப்பம்: பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அச்சம்
ADDED : ஆக 28, 2025 12:24 AM

பந்தலுார்:
தமிழக எல்லை பகுதியான பாட்டவயல் அருகே வனத்திற்கு மத்தியில் பயணிகளை இறக்கிவிட உத்தரவிட்டுள்ளதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
தமிழக-கேரளா எல்லை பகுதியாக, பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதி உள்ளது. வனத்திற்கு மத்தியில் இப்பகுதி அமைந்துள்ள நிலையில், பாட்டவயல் சோதனைசாவடி வரை, கேரளா மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், 'மாநில எல்லை வரை மட்டுமே கேரள பஸ்களை இயக்க வேண்டும்; தமிழக எல்லைக்குள் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வரை இயக்கக் கூடாது,' என, தெரிவித்து வருகின்றனர். இதனால், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளை வனத்திற்கு மத்தியில் இறக்கி விட்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது. இதனால், பயணிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பயணிகள் கூறுகையில்,' நாள்தோறும் கேரள பஸ்களில், தமிழக பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாநில எல்லையில் உள்ள பாட்டவயல் வரை பஸ்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.