sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு 'சீல்'

/

அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு 'சீல்'

அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு 'சீல்'

அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு 'சீல்'


ADDED : ஆக 27, 2025 03:08 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர்:மஞ்சூர் அருகே பேரிடர் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட எட்டு, 'உட்ஹவுஸ்' கட்டுமானங்களுக்கு, நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், தலக்காடுமட்டம் சரிவான பகுதியில் உட் ஹவுஸ் கட்டப்படுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. பாலகொலா ஊராட்சி நிர்வாக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சரிவான பகுதியில் விதி மீறி, உட் ஹவுஸ் கட்டப்பட்டு வருவது தெரிந்து, கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான முறையற்ற கட்டடங்கள் கண்காணிப்பு குழு தலைவரான மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், உதவி சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர் அஸ்வினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர், நேற்று அப்பகுதிக்கு சென்று, எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டிய, எட்டு உட் ஹவுஸ் கட்டடங்களுக்கு, சீல் வைத்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''ஆந்திராவை சேர்ந்த தானுமேத்தா, சுனில் உட்பட, எட்டு பேரின் உட் ஹவுஸ் கட்டுமானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. விசாரணை முடிந்தபின், மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us