sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு

/

கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு

கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு

கோத்தகிரியில் தொடரும் மழை; பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு


ADDED : அக் 18, 2024 10:02 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, விவசாயிகள் பசுந்தேயிலை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் ஈரத்தன்மை அதிகரித்து மகசூலும் உயர்ந்து வருகிறது.

தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 28 முதல், 32 ரூபாய் வரை விலை கிடைப்பதால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கோத்தகிரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று பகல் கன மழை பெய்தது. இரண்டு மணி நேரம் மழை தொடர்ந்ததால், விவசாய பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலையை பறிக்க முடியாமல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலைகள் முதிர்ந்து கரட்டு இலையாக மாற வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us