ADDED : மார் 07, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, : நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியாற்றி வந்த வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இணைபதிவாளராக மாறுதலாகியுள்ளார்.
சேலத்தில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராக பணியாற்றி வந்த, தயாளன் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக நேற்று பொறுப்பேற்றார். கூட்டுறவு துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில்,''நீலகிரி மக்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான கோரிக்கைகள் எதுவாக இருப்பின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக தீர்வு காணப்படும்,''என்றார்.

