sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்

/

நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்

நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்

நீலகிரி மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்தி 600 மெகாவாட்டாக உயர்வு! பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம்


ADDED : செப் 23, 2024 10:32 PM

Google News

ADDED : செப் 23, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு, 90 சதவீதம் இருப்பதால் தினசரி மின் உற்பத்தி, 600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், பைக்காரா, அவலாஞ்சி, காட்டுகுப்பை, சிங்காரா உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன.

'முக்கூறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார்,' என, 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன.

இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், மொத்தமுள்ள, 32 பிரிவுகளின் கீழ், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

ததும்பும் அணைகள்


நடப்பாண்டு துவக்கத்தில் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு, 30 சதவீதம் தான் இருந்தது. அதிகபட்சமாக, 150 முதல், 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தென் மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி தொடர்ச்சியாக பெய்தது.

இதனால், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உட்பட பிற அணைகளில் தற்போது, 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.

கடந்த இரு வாரங்களாக தினசரி மின் உற்பத்தி, 500 முதல், 600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, ஈரோடு, மதுரை மற்றும் சென்னையில் உள்ள மின் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மின் மையத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ' நடப்பாண்டு துவக்கத்தில் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது. தென் மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால், தினசரி, 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையால், 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் கிடைத்தால், இன்னும், 6 மாதங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.

நீர் மின் உற்பத்தியில் முதலிடம்!

மாநிலத்தில் அனல், காற்றாலை மற்றும் நீர் மின் என, மூன்று வகைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதில், அனல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ள ஒரு யூனிட்டுக்கு, 10 முதல் 15 ரூபாய் வரை செலவாகிறது.நீர் மின் உற்பத்திக்கு, 50 பைசா செலவாகிறது. நீர் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மஞ்சூர் அருகே காட்டுகுப்பை என்ற இடத்தில், 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீர் மின் உற்பத்தியில் நீலகிரி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us