/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த அரசு கல்லுாரி சாலை: சீரமைத்தால் பயன்
/
சேதமடைந்த அரசு கல்லுாரி சாலை: சீரமைத்தால் பயன்
ADDED : ஜன 21, 2025 10:05 PM

கூடலுார்,; 'கூடலுார் கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள அரசு கல்லுாரி சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஆமைக்குளம் மற்றும் கோழிப்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில், 2,300 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கோழிப்பாலம் கல்லுாரிக்கு கோழிக்கோடு சாலையில் இருந்து, 300 மீட்டர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லுாரியில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு பொருட்கள் எடுத்து வரும் கனரக வாகனங்கள் சென்று வர பயன்படுகிறது.
ஆனால், சாலையின் பல இடங்களில் சேதமடைந்து மாணவர்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், இச்சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை இல்லாததால், அதிருப்தி அடைந்துள்ளனர். மாணவர்கள் கூறுகையில், 'சேதமடைந்துள்ள கல்லுாரி சாலையை, உயர் கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.