sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்

/

 சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்

 சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்

 சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்


ADDED : டிச 12, 2025 07:10 AM

Google News

ADDED : டிச 12, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் நகராட்சி பகுதிக்கு, ஹெலன், இரும்புபாலம், தொரப்பபள்ளி உள்ளிட்ட குடிநீர் திட்டங்களின் கீழ், கிணறுகளில் இருந்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். பருவமழை காலங்களில் குடிநீருக்கு பிரச்னை இல்லை என்றாலும், கோடைகாலத்தில் பல பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேதமடையும் குடிநீர் குழாய்களை நிரந்தரமாக சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால், ஊழியர்கள் சைக்கிள் ரப்பர் பயன்படுத்தி தற்காலிகமாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை மீண்டும் சேதமடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.

இதனால், குடிநீர் ஆதாரங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் கோடையில், முறையாக தண்ணீர் வினியோகம் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில், கோடையில் தடையின்றி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய தேவையான குடிநீர் உள்ளது.

எனவே, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us