sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து

/

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து


ADDED : ஆக 25, 2025 09:06 PM

Google News

ADDED : ஆக 25, 2025 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுஉள்ளது.

கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.

இதனால், சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், வழக்கத்தை விட கூடுதலாக சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இச்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி வரை சேதமடைந்துள்ள, 16 கி.மீ., சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடைேய ஊசிமலை முதல் கூடலுார் வரை சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டு வருவதுடன், வாகன விபத்துக்கள் அபாயமும் உள்ளது.

டிரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலை, கொண்டை ஊசி மற்றும் ஏராளமான சிறிய வளைவுகளை கொண்டுள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us