sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு; நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

/

சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு; நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு; நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

சாலையோர கடைகளை முறைப்படுத்த முடிவு; நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்


ADDED : அக் 18, 2024 10:11 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர கடைகளை முறைப்படுத்தி வாடகை வசூலிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஆவின் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 32 ஆவின் கடைகள் உட்பட நகரில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறு இன்றி வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் ஏதேனும் இருந்தால், அவைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us