sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விளை நிலங்கள் அழிப்பால் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து! 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் கட்டடங்கள்

/

விளை நிலங்கள் அழிப்பால் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து! 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் கட்டடங்கள்

விளை நிலங்கள் அழிப்பால் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து! 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் கட்டடங்கள்

விளை நிலங்கள் அழிப்பால் சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்து! 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் கட்டடங்கள்

1


ADDED : அக் 24, 2025 11:41 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரியில் கடந்த, 10 ஆண்டுகளில் விளை நிலங்களை அழித்து, 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டது தெரியவந்ததால் சுற்று சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க 1993ல் நீலகிரிக்கான 'மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, 'மாஸ்டர் பிளான்' சட்டத்தில், மலை பகுதிகளில், 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது; 1,500 சதுரடி கட்டுமான பணிக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த விதிமுறைகளில் அரசால் ஏற்படுத்தப்பட்ட தளர்வால், பிரமாண்ட கட்டுமானங்கள் அதிகரித்து, மலை மாவட்டம், கட்டட காடாக மாறி வருகிறது. அதில் உள்ள ஒரு விதிமுறை தளர்வின் படி, 5 ஏக்கர் நிலப்பரப்பு வரையில் அமையும் மனை பிரிவுகளுக்கு, மாவட்ட கலெக்டர் ஆய்வறிக்கை அடிப்படையில், கட்டட கலை எழில் நோக்கு கமிட்டியின் ஒப்புதல் பெற்று, கோவை மண்டல அலுவலகத்தில் அனுமதி பெறலாம்.

இந்த வரம்பிற்கு மேல் உள்ள நில பயன் மாற்றத்துக்கு மட்டும், சென்னையில் உள்ள மலையிட பாதுகாப்பு குழுமமான ஹாகா ஒப்புதல் பெறவும் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. இந்த தளர்வு, நீலகிரி மலை பகுதியில் சொகுசு பங்களாக்கள், சுற்றுலா விடுதிகளை கட்டும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் பணம் படைத்தவர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது. மேலும், மாநிலத்தில் மிகவும் பேரிடர் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு, இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்கள் அழிப்பு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் விளை நிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு கட்டடங்களாக மாறி வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்றாலும், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்ட கூடாது என, விதி முறைகள் உள்ளன.

ஆனால், அந்த விதிகளை மீறி மாவட்ட முழுவதும், 30 ஆயிரம் கட்டடங்கள் விளை நிலங்களில் கட்டப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் பயிரிடப்படுவதாக தோட்டக்கலை தெரிவித்தாலும் 5 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு கட்டடங்களாக விளை நிலங்கள் மாறியுள்ளது.

சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ' நீலகிரியில் ஆபத்தான சரிவுகள், விளை நிலங்களை அழித்து உள்ளூர் மக்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த செல்வந்தர்கள், கட்டட விதிகளை மீறி கட்டடங்களை கட்டியுள்ளனர்.

நீலகிரிக்கான பேரிடர் அறிவிப்பை கருத்தில் கொண்டு குறிப்பாக விளை நிலங்களை அழித்து கட்டடங்களை கட்டுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.






      Dinamalar
      Follow us