/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
ADDED : பிப் 16, 2024 12:26 AM

கூடலுார்;கூடலுாரில் உள்ள விநாயகர் கோவில்; சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
நடு கூடலுார் அருள்மிகு விநாயகர் கோவில், மேல் கூடலுார் அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா, 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் முளைப்பாரி, தீர்த்த குடங்கள் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம், காலை 9:00 மணி முதல், தொடர்ச்சியாக யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரா பூஜை, நாபீசந்தானம், ஸ்பர்சாகுதி, நான்காம் கால யாகபூஜைகள், மகாபூர்ணாகுதி, யாத்ராதான சங்கலியம் நடந்தது.
தொடர்ந்து, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம், 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் காலை, 8:00 மணிக்கு நடுகூடலுார் அருள்மிகு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள் மேல்கூடலுார் அருள்மிகு சந்தை கடை மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.