sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம்: கை கொடுக்கும் மூலிகை வைத்தியம்

/

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம்: கை கொடுக்கும் மூலிகை வைத்தியம்

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம்: கை கொடுக்கும் மூலிகை வைத்தியம்

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம்: கை கொடுக்கும் மூலிகை வைத்தியம்


ADDED : பிப் 05, 2024 11:51 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:'கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியத்தின் வாயிலாக, குடற்புழு நீக்கம் செய்யலாம்' என, கால்நடை டாக்டர்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

சூலுார், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான கால்நடைகளுக்கு, குடற்புழு பிரச்னை ஏற்படுவது அதிகமாக உள்ளது. குடற்புழுக்களை மூலிகை வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:

அக ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படும் குடற்புழுக்கள் இளங்கன்றுகளை அதிகளவில் தாக்கும். குறிப்பாக, 'ஆம்பிஸ்டோமியாஸிஸ்' என்னும் நோயால் புழுக்கள் வளர்ந்து சிறு குடலை சேதப்படுத்தும்.

இதுபோன்ற நேரங்களில் உடற்சோர்வு ஏற்படும். கீழ்த்தாடையில் வீக்கம் ஏற்படுத்தும். இதுதவிர கறவை மாடுகளுக்கு 'சிஸ்டஸோமியாஸிஸ்' என்கிற நோயால், மாட்டின் மூக்கிற்குள் சதை வளர்ந்து, மூச்சு விட சிரமப்படுவதோடு, இறக்கவும் நேரிடும். இதை மூலிகை மருத்துவத்தில் கட்டுப்படுத்தலாம்.

15 கிராம் சீரகம், 10 கிராம் மஞ்சள், ஐந்து பூண்டு பல், ஐந்து மிளகு, ஒரு கைப்பிடி தும்பை இலை, ஒரு கைப்பிடி வேப்பிலை, 100 கிராம் வாழைத்தண்டு சாறு, 50 கிராம் பாகற்காய், 150 கிராம் பனை வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும்.

இதில், சீரகம், கடுகு, மிளகு, பனை வெல்லத்துடன் சேர்த்து, இடித்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, உப்புடன் தொட்டு, மாட்டின் நாக்கின் மீது தேய்க்க வேண்டும். ஒரு வேளை வயிற்றுக்குள் உணவாக கொடுக்க வேண்டும். இதுபோல செய்யும் போது, குடற்புழு நீக்கம் எளிதாக கட்டுப்படுத்தலாம். நோய் தாக்கம் அதிகமாக இருந்தால் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us