sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மஞ்சூரில் சிறுத்தை பலி

/

மஞ்சூரில் சிறுத்தை பலி

மஞ்சூரில் சிறுத்தை பலி

மஞ்சூரில் சிறுத்தை பலி


ADDED : செப் 08, 2011 11:19 PM

Google News

ADDED : செப் 08, 2011 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் வனப்பகுதியையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் நடமாடுவதை காண முடிகிறது.

இதனால், கிண்ணக்கொரை, கோலிஹட்டி, தேனாடு கிட்டட்டி, எடக்காடு, முள்ளிகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து சிறுத்தைகள் மர்மமான முறையில் பலியாகி வருகின்றன. நேற்று அதிகாலையில் மஞ்சூர் அருகே காந்திகண்டி பகுதி தேயிலை தோட்டத்தில் 2 வயதுள்ள ஆண் சிறுத்தை தலை, வாய், காது பகுதிகளில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது.வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார், தெற்கு வனக்கோட்ட அலுவலர் அனுராக்மிஸ்ரா, குந்தா ரேஞ்சர் ராமசாமி, வன ஊழியர்கள் சுப்ரமணி, ரவி உட்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவர் கலைவாணன் பிரேத பரிசோதனை செய்த பின் சிறுத்தையின் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us