sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'தினமலர்' பட்டம் மெகா வினாடி -வினா போட்டி: ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

/

'தினமலர்' பட்டம் மெகா வினாடி -வினா போட்டி: ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

'தினமலர்' பட்டம் மெகா வினாடி -வினா போட்டி: ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்

'தினமலர்' பட்டம் மெகா வினாடி -வினா போட்டி: ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மாணவர்கள் அசத்தல்


ADDED : டிச 09, 2024 09:40 PM

Google News

ADDED : டிச 09, 2024 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த பதில் சொல் ; பரிசை வெல் ; என்ற வினாடி - வினா போட்டியில், பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்து பரிசுகளை வென்றனர்.

'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வினாடி- வினா விருது,'2024-25' போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு வினாடி- வினா போட்டி பட்டம் மற்றும் சென்னை 'இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சார்பில், ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. அதில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. கோ-ஸ்பான்சராக சத்யா ஏஜன்சி இணைந்துள்ளது.

இதில், பள்ளி அளவில் வினாடி - வினா மாணவர்களுக்கான போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதிப்போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதன்படி, நேற்று, அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில் நடந்த, வினாடி-வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 50 பேர் எழுதினார்.

இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவன் அஜய்ராஜ், ஏழாம் வகுப்பு மாணவன் பிரியன் முதலிடம் பிடித்தனர். எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரித்வின், நந்தா பார்த்தசாரதி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ், துணை முதல்வர் ரேணுகா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் மேற்பார்வையில் ஆசிரியை ஸ்ரீஜா செய்தார். ஆசிரியர்கள் குமாரவேல், கலையரசி ஆகியோர் உடனிருந்தனர்.

'பட்டம்' மாணவர்களின் நம்பிக்கை: முதல்வர் அன்பரசி தனராஜ்

--வகுப்பறைகளில் நடத்தப்படும் பாடங்களை மட்டும் படித்து, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது கடினமாக இருப்பதாக மாணவர்கள் பரவலாக தெரிவித்து வந்தனர். தற்போது, பட்டம் இதழை படித்த பின்னர், போட்டித் தேர்வுகளை எளிதாக எழுதவும், பொது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என மாணவர்களே தெரிவித்துள்ளது, பட்டம் இதழின் வெற்றியை வெளிக்காட்டி உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளி ஆசிரியர்களும் பட்டம் இதழை படித்து தகவல்களை பதிவு செய்து கொள்கின்றனர். 'தினமலர்' பட்டம் மாணவர்களுக்கு பொக்கிஷம் என்றால் மிகை ஆகாது.



நம்பிக்கை உள்ளது



பிடிப்புகள், மற்றும் தலைவர்கள் குறித்து தகவல்களை, எளிதாக படித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தொடர்ச்சியாக பட்டத்தை படித்து, கல்வியில் பட்டம் வாங்கும் முன்னர் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.








      Dinamalar
      Follow us