sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு

/

குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு

குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு

குன்னுாரில் அபாய மர கிளைகள் வெட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவு


ADDED : டிச 20, 2024 08:00 PM

Google News

ADDED : டிச 20, 2024 08:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; 'குன்னுாரில் விழும் நிலையில் அபாயகரமாக உள்ள மரக்கிளைகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, 11 பயனாளிகளுக்கு, 1.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,'' குன்னுாரில் மக்களுக்கு பாதுகாப்பற்ற, அபாயகரமாக உள்ள மரக்கிளைகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்; தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா, இணை இயக்குனர்கள் ராஜசேகர் (மருத்துவ நலப்பணி), ஷிபிலாமேரி (தோட்டக்கலை), கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us