sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது

/

பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது

பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது

பெண்ணுக்கு தொல்லை: கோட்ட ஆய அலுவலர் கைது


ADDED : மார் 31, 2025 07:33 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் அருகே நாட்டு கோழி முட்டை வாங்க சென்ற இடத்தில், பெண்ணுக்கு தொல்லை கொடுத்த, கோட்ட ஆய அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் கோட்ட ஆய அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தராஜ், 54. இவர், மண்வயல் கோழிகண்டி பகுதியில் நேற்று முன்தினம், நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அங்கிருந்த, 42 வயது பெண், 'தற்போது முட்டை இல்லை,' என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தொல்லை செய்துள்ளார். பெண்ணின், சப்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கூடலுார் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சித்தராஜை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us