sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்

/

காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்

காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்

காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்


ADDED : ஆக 23, 2025 10:23 AM

Google News

ADDED : ஆக 23, 2025 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முதுமலையில், காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த வளர்ப்பு யானை சேரனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாம்களில், 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அபயாரண்யம் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நேற்று காலை உணவு வழங்கிய பின், வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு பாகன்கள் அழைத்து சென்றனர். அப்போது, வளர்ப்பு யானை சேரனை, திடீரென வந்த காட்டு யானை தாக்கியது. இதனை பார்த்த பாகன்கள் சப்தமிட்டு அதனை விரட்டி, யானையை மீட்டனர்.

காயமடைந்த வளர்ப்பு யானைக்கு, முதுமலை துணை இயக்குனர் வித்யா முன்னிலையில், கால்நடை டாக்டர் ராஜேஷ் சிகிச்சை அளித்தார்.

வனத்துறையினர் கூறுகையில்,'சேரன் யானை மேய்ச்சலுக்கு செல்லும் போது, திடீரென வந்த காட்டு யானை, தாக்கியதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us