sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதுமலையில் தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை

/

முதுமலையில் தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை

முதுமலையில் தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை

முதுமலையில் தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை


ADDED : ஆக 16, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றி, 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில், வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பாமா, காமாட்சி, சந்தோஷ், பொம்மன் ஆகியவை வரிசையில் நிற்க, அதன் மீது பாகன்கள், தேசிய கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன்னால் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர்.

முதுமலை துணை இயக்குனர் வித்யா கொடி ஏற்றினார். வன ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். வரிசையில் நின்றிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். விழாவில், வனச்சரகர்கள் சிவக்குமார், பாலாஜி, குலோத்துங்கசோழன், பாஸ்கர், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

யானைக்கு பிறந்த நாள் விழா தெப்பக்காடு யானைகள் முகாமில், 3 குட்டிகள் உட்பட 30 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். அதில், மறைந்த வளர்ப்பு யானை ருக்குவுக்கு, 1971 ஆக., 15ல் சந்தோஷ் யானை பிறந்தது.

55வது பிறந்த தினம் துவங்குவதால், அதனை தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறையினர் கொண்டாடினர். கேழ்வரகு, தேங்காய், இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட கேக்கை முதுமலை துணை இயக்குனர் வித்யா வெட்டி, வளர்ப்பு யானை சந்தோஷுக்கு ஊட்டினார். தொடர்ந்து, யானை பாகன் மாறன், வனச்சரகர்கள் யானைக்கு கேக் ஊட்டினர். இந்நிகழ்வை சுற்றுலா பயணிகள் 'போட்டோ' எடுத்தனர்.






      Dinamalar
      Follow us