/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருள் கடத்தல்; நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது
/
போதை பொருள் கடத்தல்; நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது
போதை பொருள் கடத்தல்; நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது
போதை பொருள் கடத்தல்; நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜன 18, 2024 10:15 PM

கூடலுார் : கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில், கூடலுாரில் கைது செய்யப்பட்ட, 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கர்நாடகாவிலிருந்து, விலை உயர்ந்த போதை பொருளை, நீலகிரி மாவட்டம் கூடலுார் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வதாக, கடந்த அக்., 30ம் தேதி கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தமிழக- கர்நாடகா எல்லையான முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கர்நாடகாவிலிருந்து வந்த காரை சோதனை செய்ததில், அதில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட 'மெத்தம் பேத்த மைன்' என்ற போதை பொருள், 290 கிராமை, நான்கு பேர் கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
கார் மற்றும் போதை பொருள், சிறிய எலக்ட்ரானிக் தராசு ஆகியவை போலீசார் பறிமுதல் செய்து, கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷாஜகான், 27, நிஜாமுதீன், 25, முகமதுசகால், 28, முகமது ஜெசிர், 25, கைது செய்தனர்.
அவர்களை, கூடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவுபடி, கூடலுார் கிளை சிறையில் அடைத்தனர். அவர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
கூடலூர் டி.எஸ்.பி., செல்வராஜ், குண்டர் சட்டத்துக்கான உத்தரவை, கூடலுார் சிறையில் இருந்த நான்கு பேரிடம் வழங்கி, அவர்களை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களை சிறையில் அடைத்தனர்.

