sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இ - பாசில் 13 லட்சம் சுற்றுலா பயணியர் 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி

/

இ - பாசில் 13 லட்சம் சுற்றுலா பயணியர் 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி

இ - பாசில் 13 லட்சம் சுற்றுலா பயணியர் 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி

இ - பாசில் 13 லட்சம் சுற்றுலா பயணியர் 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி


ADDED : அக் 02, 2024 10:13 PM

Google News

ADDED : அக் 02, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:''நீலகிரிக்கான, இ - பாஸ் மூலம், 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரியில், கடந்த கால சீசன் நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணியர் பாதியிலேயே பயணத்தை முடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருவதால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க, நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு செல்ல, ஐகோர்ட் உத்தரவின்படி, இ -- பாஸ் முறை மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறை, கடந்த 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இது, தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை நடந்தது. அதில், 'இ -- பாஸ் நடைமுறை குறித்து மறு உத்தரவு வரும் வரை தொடர வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நீலகிரிக்கு வரும் மற்ற மாவட்ட வாகனங்கள் இ - பாஸ் பதிவு செய்து வர வேண்டும். நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இது பொருந்தாது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''இ - பாஸ் நடைமுறை மே 7ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. மே முதல், செப்., 30 வரை, 2.77 லட்சம் வாகனங்களுக்கு இ - பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் பேர் இ - பாசில் ஊட்டிக்கு வந்துள்ளனர். இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us