sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி

/

ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி

ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி

ஊட்டி சாலையில் இ--பாஸ் சோதனை மையம்; கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி


UPDATED : ஏப் 22, 2025 11:59 PM

ADDED : ஏப் 22, 2025 11:26 PM

Google News

UPDATED : ஏப் 22, 2025 11:59 PM ADDED : ஏப் 22, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார்- ஊட்டி சாலைக்கு இ-பாஸ் சோதனை மையம் மாற்றப்பட்டதால், கேரளா -கர்நாடக பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோடை சீசனை தொடர்ந்து,கடந்த, 1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களை மட்டும் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட எல்லையில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் நடைமுறைப்படுத்தினர்.

இந்நிலையில், கூடலுாரை ஒட்டிய, கேரளா- தமிழக எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர் உள்ளிட்ட எட்டு இடங்களிலும், தமிழக-கர்நாடக எலலையான கக்கனல்லா பகுதிகளில் இ--பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வந்தது.

இதனால், கேரளா, கர்நாடகா இடையே பயணிக்கும் பயணிகளும் இ--பாஸ் எடுத்து பயணம் மேற்கொண்டனர். சோதனை சாவடிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிரமத்தை தவிர்க்க, சோதனை மையத்தை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்ற வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட நிர்வாக உத்தரவுபடி, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டு இ--பாஸ் சோதனை பணிகள் நிறுத்தப்பட்டு, நேற்று முதல் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மேல் கூடலுார் சில்வர் கிளவுட் சோதனை சாவடி அருகே,சோதனை மையம் செயல்பட துவங்கியுள்ளது. இதனால், 11 சோதனை சாவடிகள் நான்காக குறைந்துள்ளன.

'கூடலுார் வழியாக ஊட்டி செல்பவர்களை தவிர்த்து, பிற பகுதிக்கு செல்லும் வெளி மாநில பயணிகளுக்கு இ--பாஸ் தேவையில்லை. வழக்கம்போல் பயணிக்கலாம்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கூடலுார் வழியாக கேரளா, - கர்நாடகா செல்லும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மாநில எல்லைகளில் வாகன நெரிசல் குறைந்து, வாகனங்கள் வழக்கம் போல சென்று வர துவங்கியுள்ளன.






      Dinamalar
      Follow us