ADDED : ஜூலை 25, 2025 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே, ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சுள்ளிமடை பகுதியில், ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
தகவல் அறிந்த வாளையார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயிலில் அடிபட்டு இறந்தவருக்கு, 65 வயது இருக்கும். தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இறந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தோர், வாளையார் போலீ சாரை, தொடர்பு கொள்ளலாம், என, போலீசார் தெரிவித்தனர்.

