sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுாரில் நடைபாதை நடுவே மின்கம்பம்: மக்கள் அதிருப்தி

/

கூடலுாரில் நடைபாதை நடுவே மின்கம்பம்: மக்கள் அதிருப்தி

கூடலுாரில் நடைபாதை நடுவே மின்கம்பம்: மக்கள் அதிருப்தி

கூடலுாரில் நடைபாதை நடுவே மின்கம்பம்: மக்கள் அதிருப்தி


ADDED : ஜூலை 25, 2025 08:32 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் நகரில், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்.

கூடலுார் நகரில் போக்குவரத்து இடையூறு இன்றி மக்கள் நடந்து செல்ல வசதியாக, சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வையுடன் கூடிய நடைபாதை அமைத்துள்ளனர்.

நடைபாதையை ஆக்கிரமித்து, சிறு வியாபாரிகள் கடை வைத்ததால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். இதனால், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க கோழிக்கோடு சாலையில் மாற்றிடம் வழங்கப்பட்டது.

இதேபோன்று, புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, ஊட்டி சாலையில் நடைபாதை நடுவே, மக்கள் நடந்த செல்ல இடையூறாக உள்ள, மின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், 'நடைபாதை நடுவே உள்ள மின்கம்பிகள், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. பல ஆண்டுகளாக இதனை மாற்ற நடவடிக்கை இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, நடைபாதை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us