sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிங்கார பகுதியில் யானை பலி; வனத்துறை தீவிர விசாரணை

/

சிங்கார பகுதியில் யானை பலி; வனத்துறை தீவிர விசாரணை

சிங்கார பகுதியில் யானை பலி; வனத்துறை தீவிர விசாரணை

சிங்கார பகுதியில் யானை பலி; வனத்துறை தீவிர விசாரணை


ADDED : செப் 04, 2025 10:42 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடி சிங்கார வனப்பகுதியில், காட்டு யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வன கோட்டம், சிங்கார வனச்சரகம் சீகூர் தெற்கு வனப்பகுதியில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கிடந்ததை கண்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தனபால் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் யானைக்கு, 25 வயது இருக்கும். அதன் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளது. இறந்து மூன்று மாதங்கள் ஆனதால், எலும்புகள் மட்டுமே கிடந்தது. இதனால், உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதிகளில் மூன்று யானைகள் இறந்துள்ளது. இதில், தனியார் இடத்தில் இறந்த யானையின் தந்தம் காணவில்லை. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us