sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நெடுஞ்சாலையில் நடந்து சென்ற யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

/

நெடுஞ்சாலையில் நடந்து சென்ற யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

நெடுஞ்சாலையில் நடந்து சென்ற யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

நெடுஞ்சாலையில் நடந்து சென்ற யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்


ADDED : மார் 30, 2025 10:20 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், காட்டு யானை பகலில் நடந்து சென்ற சம்பவத்தால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய, மார்த்தோமா நகர், ஈப்பங்காடு, ஏழுமுறம், அள்ளுர்வயல், சில்வர் கிளவுட் பகுதிகளில், கடந்த சில நாட்களாக 'ஓவேலி' மக்னா என்ற யானை முகாமிட்டுள்ளது.

பகல் நேரங்களில், வனப்பகுதியில் ஓய்வெடுக்கும் யானை, இரவில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர், அதனை கண்காணித்து விரட்டினாலும், யானை குடியிருப்பு பகுதிக்கு நுழைவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மார்த்தோமா நகர் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றது. வாகன ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தி பின்னோக்கி சென்று தப்பினர். அப்பகுதி மக்கள் உதவியுடன், வன ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை எச்சரித்து வரும் யானையை வேறு பகுதிக்கு விரட்ட வேண்டும்,' என்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால், அதனை தேடி யானைகள் வரத் துவங்கியுள்ளது. இதனை தடுக்க பலா காய்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us