/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் நன்னடத்தை அமல்: ஊட்டியில் சோதனை
/
தேர்தல் நன்னடத்தை அமல்: ஊட்டியில் சோதனை
ADDED : மார் 18, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார், வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நன்னடத்தை அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மூலம், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களில், மொத்தமாக பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை பறக்கும் படையினர், முக்கிய சந்திப்புகளில் வீடியோ கவரேஜ் செய்து, சோதனையிடுகின்றனர்.
ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும், 5 பேர் கொண்ட பறக்கும் படை குழு, போலீசார் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சோதனை பணிகளை நடத்தினர்.

